அதோ வருகிறது, இதோ வருகிறது என்று ஆண்டுக்கணக்காக ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த அமைச்சரவை மாற்றம் இறுதியில் வந்தேவிட்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தமிழகம் சட்டசபை தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் தன் மந்திரி சபையில் எந்த குறைகளும் இருக்கக்கூடாது என்று நினைக்கும் முதல்வர் கருணாநிதி, அதை முன்மாதிரி சபையாக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் எனவும், அதன் விளைவே விரைவில் வரவிருக்கும் அமைச்சரைவை மாற்றம் என்றும் கூறும் அவர்களின் வாயை மேலும் கிண்டிய போது கிடைத்த தகவல்களில் சில 'அட' என்று ஆச்சரியப்பட வைப்பவை, சில 'அடடே' என அசைப்போட வைப்பவை, சில 'அச்சசோ' என பரிதாபப்பட வைப்பவை.
அட:
வரப்போகும் மாற்றங்களுக்கெல்லாம் உளவுத்துறையின் சமீபத்திய அறிக்கைகளும், கட்சி முக்கியஸ்தர்கள் தந்த தகவல்களும், துணை முதல்வரின் விருப்பங்களுமே காரணம் என்று சொல்லும் விவரமறிந்த வட்டாரங்கள், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் என்றும் கூறுகின்றன.
"அதன் விளைவாக அவர்களுக்கு கூடுதல் இலாக்காக்கள், கட்சிப்பதவிகள் போன்ற ஜாக்பாட்கள் அடிக்கலாம். அடுத்த தேர்தலிலும் திமுக ஆட்சிக்கு வர கடுமையாக உழையுங்கள், தக்க சன்மானம் கிடைக்கும் போன்ற உத்திரவாதங்களும் வழ்ங்கப்படலாம். இந்த பட்டியலில் இளைய அமைச்சர்கள் மூவரும், மூத்த மந்திரிகள் இருவரும் இருக்கிறார்கள்," என்று மேலும் அடுக்கின.
அடடே:
"அமைச்சரவையில் இருக்கும் சிலர் செய்யும் அசகாயசூர வேலைகள் முதல்வரின் காதுக்கு வந்துள்ள நிலையில், அவை தேர்தலில் கட்சியின் வெற்றிவாய்ப்புக்கு வேட்டு வைக்கலாம் என்று கருதும் அவர், சில பேரை கடுமையாக எச்சரிக்க உள்ளார்," என்ற வி.வ கள் அதை மேலும் விவரித்தன.
"ஒவ்வொரு மந்திரியின் செயல்பாடுகள் பற்றியும் முதல்வரிடம் தனித்தனி ஃபைல் தரப்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு அவர்களை சந்திக்கப்போகும் அவர், அமைச்சர்கள் தங்களுக்கு மிக மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்க்ளைப் பட்டியலிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகிறார்.
தங்கள் சொந்தத்தொகுதியிலும் சொந்தத்துறையிலும் அமைச்சர்கள் செய்த, செய்துக்கொண்டிருக்கும் 'ராஜதந்திரங்களை' அவர்களுக்கே விலாவரியாக சொல்லப்போகும் முதல்வர், இது தான் அவர்களுக்குக் கொடுக்கப்படும் கடைசி சந்தர்ப்பம் எனவும், இன்னொரு முறை ஏதேனும் தவறான தகவல் தன் காதுக்கு வந்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்போகிறார்."
அச்சச்சோ:
"சில மிக மூத்த அமைச்சர்களின் உடல் நிலையில் மிகவும் அக்கறைக்காட்டும் கருணாநிதி, அவர்களை ஒய்வெடுத்துக்கொள்ளச் சொல்லும் மனநிலையில் உள்ளாராம்," என்று கூறிய வி.வ கள், அதை மேலும் விவரிக்கையில்:
"அந்த மந்திரி பிரதானிகளின் பணிச்சுமை அவர்களின் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கும் என்று கருதும் முதல்வர், அவர்களை அமைச்சரவையிலிருந்து விடுவித்து மிக விரைவில் அமைக்க்கப்படவிருக்கும் மேல்சபையில் அமரவைத்து அழகுப்பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல், அவர்கள் மனம் கோணமல் இருப்ப்தற்கும், ஸ்டாலின் கையில் ஆட்சிக்கட்டிலை ஒப்படைப்பதற்கும், தானே
கூட அடுத்த சட்டசபை தேர்தலில் நிற்காமல் மேலவை உறுப்பினர் ஆகலாம்," என்று கூறி முடித்தனர்.