விருதுநகர், ஜுலை 27 விருதுநர் மாவட்டம் மகராஜபுரம் அண்ணா நகரில் 30 பேர் அடங்கிய கும்பல் ஒன்று வெடிகுண்டுகளை வீசி தாக்கியதில், வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அண்ணா நகரில் வசித்து வந்த ராமு என்பவர், தனது தந்தை மூக்கையா மற்றும் நண்பர் முத்துராஜ் ஆகியோருடன் சேர்ந்து மாத்தூரில் ஆட்டுக் கடை நடத்தி வந்துள்ளார். ஆடுகளுக்கு பாதுகாப்பாக 3 பேரும் அங்கேயே இருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 30 பேர் அடங்கிய கும்பல் ஒன்று அங்கு வந்து அவர்களிடம் திடீரென தகராறில் ஈடுபட்டது. அப்போது திடீரென அந்த கும்பலில் இருந்தவர்கள் வெடி குண்டுகளை வீசினர். அரிவாளாலும் வெட்டினர். இதில் ஒரு குண்டு வெடித்ததில் ராமு, மூக்கையா, முத்துராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராமுவை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
மூக்கையாவும், முத்து ராஜும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கன்பட்டுள்ளனர். பெரும் பரபரப்ந ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.