தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகைகள் யார்? யார்? என்றால், சட்டென்று ஞாபகத்திற்கு வருபவர் சுஹாசினி. தற்போது ஏதாவது ஒரு படத்தில் சிறிய கதாபாத்திறத்தில் நடித்து வரும் சுஹாசினி, 'உள்ளமெல்லாம் தள்ளாடுதே' என்ற படத்தின் மூலம் மறுபடியும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறுவார் என கூறப்படுகிறது.
அப்படி ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொண்ட அப்படத்தில் சுஹாசினி, இளம் வயது விதவைத் தாயாக நடித்திருக்கிறார். அவருக்கு மகளாக அர்ச்சனா நடித்திருக்கிறார். அம்மா மகள் உறவை ஒரு வரையறுக்க முடியாத கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தில் இளம் வயது விதவையாக நடித்திருக்கிறார் சுஹாசினி.
ஹரி புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் அர்ச்சனா, சிவாஜி ராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நாகேந்திரகுமார் ஒளிப்பதிவு செய்து இயக்கவும் செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் கிரண் சுனில், இசை காஷ்யப்.
இப்படத்தில் சுஹாசினி அம்மாவாக நடித்தாலும், கதையின் நாயகி அவர்தானாம். இதனால் சுஹாசினிக்கு இப்படத்தின் மூலம் மறுபடியும் விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக கோடம்பாக்கத்தில் கூவிவருகிறார்களாம்